`காசேதான் கடவுளடா….’ பாணியில் காசு கொண்டு அஜித் ஓவியத்தை வரைந்த ரசிகர்!

‘துணிவு’ 2 ஆவது பாடலான ’காசேதான் கடவுளடா’ பாடல் வரிக்கு ஏற்ப பிரஷ் பயன்படுத்தாமல் காசாலேயே (நாணயத்தினாலேயே), நடிகர் அஜித் உருவத்தை வரைந்து கள்ளக்குறிச்சி ஓவியர் அசத்தி உள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர் சு. செல்வம், அஜித்தின் துணிவு பட 2 ஆவது பாடலான காசேதான் கடவுளடா பாடல் வரிக்கு ஏற்ப பிரஷ்க்கு பதிலாக “காசாலேயே” நடிகர் அஜித் உருவத்தை வரைந்து அசத்தியுள்ளார்.

image

நடிகர் அஜித் நடித்து வெளிவர இருக்கும் துணிவு திரைப்படத்தின் முதல் பாடல் சில்லா சில்லா நல்ல வரவேற்பு பெற்று ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது துணிவு படத்தின் இரண்டாவது பாடலான “காசேதான் கடவுளடா” பாடல் வெளிவந்து பெரிய வரவேற்பை பெற்றுவரும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.

image

வெளியானதில் இருந்தே அதிகமான பார்வையாளர்களை பெற்றுவரும் காசேதான் கடவுளடா பாடலால், அஜித் ரசிகர்கள் மேலும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். துணிவு திரைப்படம் மற்றும் பாடல்கள் வெற்றி பெற வேண்டி மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர் சு.செல்வம் என்பவர் பிரஷ் பயன்படுத்தாமல், காசேதான் கடவுளடா என்ற பாடல் வரிக்கு ஏற்ப “காசாலேயே” நடிகர் அஜித்தின் உருவத்தை நீர் வண்ணத்தில், 20 ரூபாய் காசை (காயினை) தொட்டு பத்தே நிமிடங்களில் வரைந்து அசத்தினார்.

image

இந்த ஓவியத்தை பார்த்த பொதுமக்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் அனைவரும் ஓவியர் செல்வத்துக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.