சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் மருத்துவமனைகள், மயானங்கள் நிரம்பி வருகின்றன..!

சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள், தகனக்கூடங்கள் நிரம்பி வருவதாக கூறப்படுகிறது.

பெய்ஜிங் மக்கள் தொகையில் 70 சதவீதத்திற்கும் அதிமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

பொதுமுடக்கம் மற்றும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதில் இருந்து கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

சீனாவில் மொத்த மக்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் அதாவது பூமியின் மக்கள் தொகையில் 10 சதவீதத்தினர் அடுத்த 90 நாட்களில் தொற்றால் பாதிக்கப்படுவார்கள் எனவும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் லட்சக்கணக்கில் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.