சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) இலங்கையின் 2.9 பில்லியன் டொலர் பிணை
எடுப்புக்கான ஒப்புதல், 2023 ஜனவரிக்கு அப்பால் செல்லக்கூடும் என்று நிதி
இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
2023 ஜனவரியில் ஒப்புதல் வழங்கப்படும் என்று சமீபத்தில் கூறப்பட்டாலும், IMF
இன் இயக்குநர்கள் குழுவின் ஒப்புதல் மேலும் தாமதமாகலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனுமதியைப் பெறுவதற்கான அதிகபட்ச முயற்சி
எவ்வாறாயினும், 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சபையின் அனுமதியைப்
பெறுவதற்கான அதிகபட்ச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சேமசிங்க
குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இந்த பிணை எடுப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் அனுமதிக்கப்படும் என
முதலில் எதிர்பார்க்கப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.