ஆயுதம் வாங்க அமெரிக்கா சென்ற உக்ரைன் அதிபர்.!

உக்ரைன் நேட்டோவில் இணைய அதிபர் ஜெலன்ஸ்கி நடவடிக்கைகள் மேற்கொண்டதால், ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது. அதன்படி உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. தாக்குதலை தொடுத்த ரஷ்யா, இரண்டே நாளில் உக்ரைன் தலைநகர் கீவ் வரை முன்னேறியது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா ஆயுதங்களை தாராளமாக உக்ரைனுக்கு வழங்க ஆரம்பித்தது. அதேபோல் பல்வேறு நேட்டோ உறுப்பு நாடுகளும் தாராளமாக ஆயுதங்களை வழங்கின. இதனால் கடந்த 10 மாதங்களாக போர் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது.

போர் காரணமாக உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர். ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீதான போரை ரஷ்யா கைவிட வேண்டும் எனவு, அமைதி திரும்ப வழிவகை செய்ய வேண்டும் எனவும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக, உலகம் முழுவதும் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது.

பல மேற்கத்திய நாடுகளில் கடும் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவின் உதவியால் உக்ரைன் போர் நீண்டு வருவதால், போரை நிறுத்த வேண்டும் என விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட மேற்கத்திய நாடுகளில் உள்ள பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடதக்கது. அதேபோல் இந்த போரால் இலங்கை நாடு திவாலாகிவிட்டது.

கடந்த 10 மாதங்களாக நீண்டு வரும் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கும் தயங்காது என ரஷ்ய அதிபர் புதின் கடந்த 3ம் தேதி தெரிவித்தார். அணு ஆயுதப்போர் மூளும் அபாயம் ஏற்பட்டதையடுத்து கடந்த 16ம் தேதி இந்திய பிரமர் மோடி, ரஷ்ய அதிபருடன் போனில் தொடர்பு கொண்டு, பேச்சு வார்த்த்தை மூலம் அமைதி நடவடிக்கை மேற்கொள்ள முடியும். என தனது கருத்தை பகிர்ந்து கொண்டார்.

டாக்டர்.பாலகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது.

இந்தநிலையில் ரஷ்யாவை சமாளிக்க அமெரிக்காவிடம் இருந்து ஆயுதம் வாங்க, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று அமெரிக்கா சென்றார். அமெரிக்க அதிபர் ஜோ பிடனைச் சந்தித்து, ஆயுதம், ஆயுதம், உக்ரைனுக்கு அதிக ஆயுதம் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த குளிர்காலத்தில் உக்ரைனின் ஆற்றல் மையங்கள் மற்றும் நீர் வளங்களை குறிவைத்து அமெரிக்க தாக்குதல் நடத்தி வருவதால், அதை சமாளிக்க ஆயுதம் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா ருத்ர தாண்டவம்… திங்கள் முதல் மீண்டும் பள்ளிகள் மூடல்… ஷாங்காய் ஷாக்!

2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் உக்ரைனுக்கு வழங்க இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ரஷ்யா தொடர்ந்து தீவிரமாக உக்ரைனை தாக்கி வருவதால், வரும் நாட்களில் இந்த மதிப்பு இன்னும் அதிரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.