சுற்றுலா பஸ் கவிழ்ந்து 9 மாணவியர் பலி| Dinamalar

இம்பால்”:மணிப்பூரில் சுற்றுலா சென்ற பள்ளி பஸ் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், ஒன்பது மாணவியர் உயிர்இழந்தனர்; 2௫ மாணவியர் பலத்த காயமடைந்தனர்.

மணிப்பூரில், முதல்வர் பீரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மலைப் பகுதியான நோனி மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் இருந்து, நேற்று கல்விச் சுற்றுலா சென்றனர். ஒரு பஸ்சில் மாணவர்கள், மற்றொரு பஸ்சில் மாணவியர் என, இரண்டு பஸ்கள் புறப்பட்டன.

இதில், மாணவியரை ஏற்றிச் சென்ற பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, மலைப்பாதையில் கவிழ்ந்தது. இதில், ஒன்பது மாணவியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மாநில பேரிடர் மீட்புப் படையினர், மருத்துவக் குழுவினர் விரைந்து சென்று, படுகாயமடைந்த ௨௫ மாணவியரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இறந்த மாணவியரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த மாநில முதல்வர் பீரேன் சிங், அவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாயும் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.