தாஜ்மஹாலில் கொரோனா பரிசோதனை கட்டாயம்

ஆக்ரா,: தாஜ்மஹால் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா சோதனை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா உள்படபல நாடுகளில் வேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நுழைந்துவிட்டது.  இந்த நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாஜ்மஹாலை பார்வையிட வரும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று ஆக்ரா மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆக்ரா மாவட்ட சுகாதாரத் தகவல் அதிகாரி அனில் சத்சங்கி கூறுகையில், ‘ கொரோனா தொற்றுநோய் பரவாமல் தடுக்க சுகாதாரத் துறை ஏற்கனவே சோதனைகளைத் தொடங்கியுள்ளது. எனவே தாஜ்மஹாலில் பார்வையாளர்கள் அனைவருக்கும் சோதனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.