ஒப்பந்தத்தை மீறிய மருத்துவரிடம் வட்டி கேட்பது சரியல்ல: உயர் நீதிமன்றம்

மதுரை: உயர் மருத்துவ கல்வி ஒப்பந்தத்தை மீறிய மருத்துவரிடம் எஞ்சிய பணிக் காலத்துக்கு வட்டி கேட்பது சரியல்ல என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி அரசு மருத்துவமனையில் 2006-ல் அரசு மருத்துவராக நியமிக்கப்பட்டவர் டாக்டர் ஹேமா துரைச்சாமி. இவருக்கு அரசு மருத்துவர் ஒதுக்கீட்டில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 3 எம்எஸ் படிக்க சீட் கிடைத்தது. படிப்பு முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்தார். பின்னர் சிறப்பு படிப்பு படிக்க 2 ஆண்டு விடுமுறையில் சென்றார். இப்படிப்பு 2016-ல் முடிந்த நிலையில் அவர் மீண்டும் பணியில் சேரவில்லை.

இதனால் அரசுடனான ஒப்பந்த விதியை மீறியதாகவும், இதனால் அரசுக்கு ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு மீதமுள்ள பணிக்காலத்துக்கான வட்டியும் செலுத்த வேண்டும் என தேனி அரசு மருத்துவக்கல்லூரி டீன் 2.6.2022-ல் உத்தரவிட்டார். அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஹேமா உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: ”மனுதாரர் அரசுக்கு ரூ.10 லட்சம் பணம், அந்தப் பணத்தைக் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நாளிலிருந்து பணத்தை செலுத்தும் நாள் வரைக்கும் வட்டியும் செலுத்த தயாராக உள்ளார். அதற்கான வரைவு காசோலையை வழங்கியுள்ளார். அவரிடம் எஞ்சிய பணிக்காலத்துக்கும் வட்டி கேட்பது சரியல்ல. ஒப்பந்த விதிமுறையிலும் அவ்வாறு கூறப்படவில்லை. எனவே தேனி மருத்துவக் கல்லூரி உத்தரவில் மாற்றம் செய்யப்படுகிறது” என உத்தரவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.