சொத்து தகராறு காரணமாக பெண் ஒருவர் இரும்பு ராடால் அடித்துக் கொலை.. தலைமறைவாக இருந்த நபர் கைது..!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே சொத்து தகராறு காரணமாக பெண் ஒருவர் இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கன்னிகைபேரைச் சேர்ந்த முருகன் மற்றும் அவரது சித்தப்பா மகன் விஷால் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவு முருகன் வீட்டிற்குள் நுழைந்த விஷால், அங்கிருந்த, முருகன், அவரது மகன் நிதி, தாயார் மற்றும் மனைவி ரம்யா ஆகியோரை, இரும்பு ராடால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் நிகழ்விடத்திலேயே ரம்யா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில், காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தாக்குதல் நடத்திவிட்டு, தலைமறைவாக இருந்த விஷாலை போலீசார் கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.