தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜன. 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜன. 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழா இவ்வாண்டு வரும் இன்று முதல் 11ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. எனவே இந்த விழாவை  முன்னிட்டு வரும் ஜன. 11ம் தேதி (புதன்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து  தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார். மேலும் இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 21-ம் தேதி சனிக்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை செலவாணி முறிய சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் குறிப்பிட்ட பணிகளுடன் இயங்கும் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.