தர்மபுரியில் பரபரப்பு.! விவசாயி கழுத்தை நெரித்து கொலை.! வாலிபர் கைது

தர்மபுரி மாவட்டத்தில் முன் விரோதத்தில் விவசாயியை கழுத்தை நெரித்து வாலிபர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அருகே சிட்லிங் பகுதியை சேர்ந்தவர் விவசாயி மனோகரன் (55). இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு தோட்டத்துக்கு காவல் சென்றுள்ளார். ஆனால் மறுநாள் நீண்ட நேரம் ஆகியும் மனோகரன் வீட்டிற்கு வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் தோட்டத்திற்கு சென்று பார்த்தனர். அப்பொழுது கழுத்தில் காயத்துடன் மனோகரன் இறந்து கிடந்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மனோகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அதே பகுதியை சேர்ந்த கார்த்திக்கு (32) என்பவரது குடும்பத்தினருக்கும், மனோகரன் குடும்பத்தாருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது தெரியவந்தது.

இந்நிலையில் கார்த்திக்கின் மனைவி மனோகருடன் சகஜமாக பேசி பழகியுள்ளார். இதையறிந்த கார்த்திக் ஆத்திரமடைந்து தோட்டத்தில் தனியாக இருந்த மனோகரனை கழுத்தை நெரித்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கார்த்திகை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.