மல்யுத்த வீரர்கள் போராட்டம்: விசாரிக்க குழு அமைத்தார் அனுராக் தாக்கூர் | Wrestlers strike: Anurag Thakur forms committee to investigate

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின், பாலியல் தொடர்பாக விசாரிக்க இன்று(ஜன.,23) கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார். இது மல்யுத்த வீரர்கள் போராட்டத்தின் எதிரொலியாக அமைந்துள்ளது.

latest tamil news

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எப்.ஐ.,) தலைவராக உ.பி., லோக்சபா எம்.பி., பிரிஜ் பூஷன் சரண் சிங், கடந்த 2011 முதல் உள்ளார். இவர் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தன.

இதையடுத்து இந்தியாவின் முன்னணி வீராங்கனை வினேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், சங்கீதா போகத் உட்பட ஒட்டுமொத்த மல்யுத்த நட்சத்திரங்கள் பிரிஜ்பூஷன் சிங்கிற்கு எதிராக போர்க்கொடி துாக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தவிர இந்தியாவில் உள்ள அனைத்து டபிள்யு.எப்.ஐ., அமைப்பையும் கலைத்து விட்டு, புதிய கூட்டமைப்பு உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்திய ஒலிம்பிக் சங்கம், மல்யுத்த வீரர்களின் கோரிக்கையை ஏற்று பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை விசாரிக்க 7 பேர் அடங்கிய குழு ஒன்றை நியமிப்பதாக உறுதியளித்தது. இதையடுத்து, மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

latest tamil news

இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின், பாலியல் தொடர்பாக விசாரிக்க இன்று (ஜன.,23) கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் மேற்பார்வைக் குழுவின் தலைவராக இருப்பார். வரும் ஒரு மாதத்திற்கு, மல்யுத்த வீரர்கள் முன் வைத்த குற்றச்சாட்டுகளை குழு விசாரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.