ஜன.28,29ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்.!

இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது அதற்கடுத்த 3 தினங்களில் மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்பதால், வருகின்ற 28, 29ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடனே காணப்படும் என்று தெரிவித்துள்ள வானிலை மையம், இந்திய பெருங்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.