கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 1,444 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் துறையின் சீரிய முயற்சியால், 2017 ஏப்ரல் முதல் 2022 டிசம்பர் வரை 1,444 கொத்தடிமைத் தொழிலாளர்கள் கொத்தடிமை முறையிலிருந்து மீட்கப்பட்டு அவர்களுக்கு விடுதலை சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு ரூ.3,03,73,000 நிவாரணமாக வழங்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.