Thalaivar 170: ரஜினியின் தலைவர் 170 படத்தை இயக்கும் ஜெய்பீம் ஞானவேல்: கொந்தளிக்கும் அஜித் ரசிகர்கள்

மார்ச் 2ம் தேதி காலை 10.30 மணிக்கு மிகப் பெரிய அறிவிப்பு வெளியாகவிருக்கிறது என லைகா நிறுவனம் நேற்று மாலை ட்வீட் செய்தது. அதை பார்த்த அஜித் குமார் ரசிகர்களோ, இது கண்டிப்பாக ஏ.கே. 62 படம் குறித்த அறிவிப்பு தான் என முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

அப்பாடி ஒரு வழியாக அஜித் பட அறிவிப்பு வெளியாகப் போகிறது என சந்தோஷத்தில் இருந்தார்கள். காலையில் இருந்தே லைகா நிறுவனத்தின் ட்விட்டர் பக்கமே கதியாக கிடந்தார்கள். அறிவித்தபடி 10.30 மணிக்கு அறிவிப்பு வெளியானது. அதை பார்த்த அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்ததுடன் கோபமும் அடைந்திருக்கிறார்கள்.

லைகா நிறுவனம் ஏன் போனி கபூர் மாதிரி நடந்து கொள்கிறது என கோபமாக விளாசுகிறார்கள். அதற்கு காரணம் வெளியானது ஏ.கே. 62 பட அறிவிப்பு இல்லை மாறாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 170 பட அறிவிப்பாகும்.

தலைவர் 170 படத்தை சூர்யாவின் ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்குவார், அனிருத் இசையமைப்பார் என லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

லைகா நிறுவன தலைவரான சுபாஸ்கரனின் பிறந்தநாளான இன்று தலைவர் 170 பட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். படப்பிடிப்பு விரைவில் துவங்கி அது 2024ம் ஆண்டு ரிலீஸுக்கு தயாராகிவிடும் என தெரிவித்துள்ளனர்.

தலைவர் ரஜினிகாந்துடன் சேர்ந்து மீண்டும் படம் பண்ணுவதில் லைகா நிறுவனம் சந்தோஷப்படுகிறது. இந்த படம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என நம்புவதாக லைகா நிறுவன அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

AK62:த்ரிஷா, நயன்தாரா வேண்டாம், காந்தக் கண்ணழகியை அஜித் ஜோடியாக்கும் லைகா?

லைகா நிறுவன ட்வீட்டை பார்த்து அஜித் குமார் ரசிகர்கள் திட்டிக் கொண்டிருக்க ரஜினி ரசிகர்களோ சந்தோஷத்தில் இருக்கிறார்கள். ஞானவேல் தலைவரை வைத்து நிச்சயம் ஒரு சமூக அக்கறை படத்தை கொடுப்பார். நாங்கள் வெயிட்டிங் ஞானவேல் என ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்பும் கூட இதே போன்று பெரிய அறிவிப்பு வெளியாகும் என ட்வீட் செய்தது லைகா. அதை பார்த்ததும் ஏ.கே. 62 பட அப்டேட் என நினைத்தார்கள் அஜித் ரசிகர்கள். ஆனால் திருவின் குரல் படம் குறித்த அறிவிப்பு வெளியானது.

இப்படியே தொடர்ந்து டுவிஸ்டு மேல் டுவிஸ்டு வைத்து எங்களை ஏமாற்றுவதே இந்த லைகாவுக்கு வேலையாகிவிட்டது என அஜித் ரசிகர்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். அஜித் ரசிகர்களின் நிலைமையை பார்த்து சமூக வலைதளவாசிகள் பாவப்படுகிறார்கள். அப்டேட் கேட்டு கெஞ்சுவதே இந்த அஜித் ரசிகர்களுக்கு வேலையாகிவிட்டது. பாவம், அவர்களுக்குனே இப்படி ஆட்கள் வருகிறார்கள் என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.

ரஜினியின் படங்களுக்கு அனிருத் தான் தொடர்ந்து இசையமைத்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்திற்கும் அனிருத் தான் இசை. ஜெயிலர் படப்பிடிப்பு நிறைவடையவிருக்கும் நேரத்தில் தலைவர் 170 பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கிடையே பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் சிலர் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.