தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர் மீது தாக்குதல் ஏதும் நடைபெறவில்லை.. தமிழ்நாட்டில் ஆய்வு செய்த 4 பேர் குழு பாட்னாவில் பேட்டி

தமிழ்நாட்டில் எந்தவொரு புலம்பெயர்ந்த தொழிலாளியும் தாக்கப்படவில்லை என பீகாரில் இருந்து ஆய்வு செய்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

4 பேர் கொண்ட பீகார் அதிகாரிகள் குழுவினர் சென்னை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் பீகார் தொழிலாளர்களை சந்தித்து நிலைமையை கேட்டறிந்தனர்.

இந்நிலையில் பாட்னாவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இக்குழுவினர் தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் மேல் தாக்குதல் நடைபெறுவதாக பரப்பி விடப்பட்ட குறுஞ்செய்திகள்போலியானவை என்றுதெரிவித்தனர்.

 இதனிடையே போலி வீடியோக்களைப் பரப்பிய இரண்டு பேரை பீகார் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.