கைதாகும் இம்ரான் கான்? பதற்றத்தில் பாகிஸ்தான்..வெளியாகும் பரபரப்பு காட்சிகள்


பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து அந்நாட்டில் பெரும் பதற்றம் உண்டாகியுள்ளது.

இம்ரான் கான் மீது வழக்கு

நீதித்துறையை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட உள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்தன.

இதனால் அங்கு பதற்றம் உண்டானது.

இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதன் காரணமாக நேற்றைய தினம் கைது செய்யப்பட இருந்த இம்ரான் கான் நாளை (16ஆம் திகதி) வரை கைது செய்ய இஸ்லாமாபாத் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பலத்த பாதுகாப்பு

எனினும் பாகிஸ்தானில் பதற்றம் தொடர்ந்து வருகிறது. லாகூரில் உள்ள இம்ரான் கான் வீட்டைச் சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இம்ரான் கான்/Imran Khan

@PTI

முன்னதாக பிரச்சார பேரணியின்போது இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.    





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.