'மனைவியின் கோபத்திற்கு நன்றி' அவுஸ்திரேலிய நபருக்கு ஒரே நேரத்தில் விழுந்த இரண்டு ஜாக்பாட்!


மனைவியின் கோபத்தால் அவுஸ்திரேலியர் ஒருவர் ஒரே வாரத்தில் இரண்டு முறை 1 மில்லியன் டொலர் லொட்டரியை வென்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவில், வோல்லோங்கொங்கின் டாப்டோவில் வசிக்கும் தம்பதியினர், ஒரே வாரத்தில் ஒரு முறை அல்ல, இரண்டு முறை லொட்டரியை வென்றனர்.

இதற்கு காரணம், அந்த நபர் இரண்டு முறையும் ஒரே என்ட்ரியில் லொட்டரி சீட்டை வாங்கியது தான். ஆனால், அப்படி அவர் செய்ததற்கு காரணம், அவரது மனைவியின் பயங்கரமாக கோபம் என்பது தான் வேடிக்கை.

Representative Image

தனது அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ளாத அந்த வெற்றியாளர், இது குறித்து கூறுகையில், அவர் எப்போதுமே தனது மனைவி சொல்லும் அந்த ஒரு எண்ணில் மட்டும் தான் லொட்டரி சீட்டை வாங்குவாராம். ஆனால், கடந்த வாரம் அவர் புதிதாக ஒரு எண்ணில் லொட்டரியை வாங்கியுள்ளார்.

இதை அறிந்த அவரது மனைவி தன மீது மிக்வும் கோபமாக இருந்ததாக கூறினார். அவரை சமாதானப்படுத்துவதற்காக, இந்த வாரம் அவரது மனைவி சொல்லும் அதே எண்ணில் இரண்டு முறை லொட்டரியை வாங்கியுள்ளார்.

அவர் இவ்வாறு வாங்கிய சமயத்தில் தான் அவருக்கு அடித்தது இரட்டை ஜாக்பாட். எனவே அவருக்கு மொத்தம் 2 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் பரிசாக விழுந்தது.

அவரது மனைவி, இந்த ஒரே எண்ணில் தான் கடந்த 30 ஆண்டுகளாக லொட்டரியை விளையாடிவருகிறாராம்.

இந்நிலையில், இரண்டு பரிசுகளை வென்றதற்கு அவரது மனைவியின் கோபம் தான் காரணம் என அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.