சென்னை : சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதருக்கு கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்த நிலையில், மகளை பார்க்க வேண்டும் என்று அர்னவ் அப்பா பாசத்தில் புலம்பி உள்ளார்.
5 ஆண்டுகளாக விழுந்து விழுந்து காதலித்து திருமணம் செய்து கொண்ட திவ்யா மற்றும் அர்னவ் ஜோடி குடும்ப சண்டையை வீதிக்கு இழுத்து பெயரை கெடுத்துக் கொண்டனர்.
மேலும் கர்ப்பிணி என்றும் பாராமல், அடித்து துன்புறுத்தியாக மீடியா முன் கதறி அழுது அனுதாபத்தைக் தேடிக்கொண்டார் திவ்யா.
அர்னவ் கைது : நடிகை திவ்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் அர்னவ் மீது கொலை மிரட்டல் வன்புணர்வு உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து,புழல் சிறையில் 15 நாள் அடைத்தனர். அதன் பிறகு ஜாமீனில் வந்த அர்னவ், நான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும் என்றும் கூறியிருந்தார்.
குழந்தையை பாருங்க : இதையடுத்து, கடந்த வாரம் திவ்யா ஸ்ரீதருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், குழந்தையின் கையை பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். திவ்யாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், அர்னவின் இன்ஸ்டாகிராமில் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. நீங்க அப்பா ஆயிட்டிங்க, ஈகோவை தூக்கிப்போட்டு விட்டு குழந்தையை போய் பாருங்க என பலர் அர்னவிற்கு அறிவுரை கூறினர்.

வாழவே பிடிக்கவில்லை : இந்நிலையில், அர்னவ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், காதலுக்காக எனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டேன். எந்த அன்பிற்காக பெற்றோரை எதிர்த்தேனோ, அந்த அன்பு எனக்கு அதிகமான வலியை கொடுத்துவிட்டது. நான் வாழ்க்கையில் பல ஏமாற்றங்களை சந்தித்து இருக்கிறேன் எனக்கு வாழவே பிடிக்கவில்லை
குழந்தையை பார்க்கணும் : குழந்தைகள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும், ஊரில் இருக்கும் பல குழந்தைகளை தூக்கி கொஞ்சி விளையாடி இருக்கிறேன். ஆனால், என் குழந்தையை தூக்க முடியவில்லை. இதற்கு மேல் திவ்யாவுடன் சேர்ந்து வாழ முடியாது, அதில் எனக்கு விருப்பமும் இல்லை, ஆனால், குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நேரில் போக முடியாது சட்ட சிக்கல் இருப்பதால், வீடியோவில் குழந்தையை காட்டினால் போதும் என்று அர்னவ் கண்ணீர் மல்க கூறினார்.