
முதல்வருடன் கிரிக்கெட் போட்டியை ரசித்த தனுஷ்
சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஐதராபாத் அணியும் மோதின. இந்தப்போட்டியில் சென்னை அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், மற்றும் துர்கா ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, உதயநிதி ஆகியோரும் பார்த்து ரசித்தார்கள். அதோடு நடிகர் தனுஷ் மற்றும் அஜித்தின் மனைவி ஷாலினி, அவரது மகன், மகளுடன் வந்திருந்தார். முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் அருகில் அமர்ந்து நடிகர் தனுஷ் இந்த போட்டியை கண்டுகளித்த புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகின.