பழைய பாட்டில்கள் மற்றும் பேப்பர்களை சேகரித்த பெண்ணை காலணியால் தாக்கிய நபர் கைது..!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் சாலையில் கிடக்கும் பழைய பாட்டில்கள் மற்றும் பேப்பர்களை சேகரிக்கும் பெண்ணை காலணியால் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.

வழக்கமாக பழைய பாட்டில்கள், பேப்பர்கள் மற்றும் இரும்பு பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரு பெண்களை வழிமறித்த சாமிநாதன் என்பவர், அவர்கள் வைத்திருந்த பொருட்களை கீழே கொட்டி காலணியால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இதனை அடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சாமிநாதனை தேடி வந்த போலீசார், பொது இடத்தில் பெண்ணை அடித்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அப்பெண்கள் பழைய பொருட்களை சேகரித்தபோது அப்பகுதியில் உள்ள வீடுகளில் ஏதேனும் பொருட்களை திருடி வைத்துள்ளனரா? என சந்தேகித்து தாக்கியது தெரியவந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.