அடித்து நொறுக்கும் மழை.. இங்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை.. அதிரடி அறிவிப்பு

நீலகிரி:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்

அடித்து துவம்சம் செய்து வரும் நிலையில், நாளை சில இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளாவில் மழை அடித்து நொறுக்கி வருகிறது. இடுக்கி, கண்ணூர், கோழிக்கோடு, பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. விடாமல் தொடர்ந்து மழை பெய்வதால் அங்கு பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தின் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், நாளை நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.