சிஎஸ்கே அணியில் யோகி பாபுவை இணைப்பதற்கு நிபந்தனை போட்ட தோனி

கிரிக்கெட் வீரர் தோனி, தனது தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் ‛எல்ஜிஎம்' என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் தனது மனைவி சாக்க்ஷியுடன் கலந்து கொண்டார் தோனி. இந்த நிகழ்ச்சியை தொடங்குவதற்கு முன்பு தொகுப்பாளினி, நடிகர் யோகி பாபு நன்றாக கிரிக்கெட் விளையாடுவார். அவரை சிஎஸ்கே அணியில் சேர்த்துக் கொள்வீர்களா? என்று தோனியை நோக்கி ஒரு கேள்வி கேட்டார். இதற்குப் பின்னர் மேடையில் பேசிய போது ஒரு பதில் கொடுத்தார் தோனி.

அவர் கூறுகையில், நடிகர் யோகி பாபுவுக்கு கிரிக்கெட் ஆர்வம் உள்ளது என்பது எனக்கு தெரியும். அவரை சிஎஸ்கே அணியில் இணைப்பதற்கு நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. யோகிபாபு மேட்ச் விளையாடும் நேரத்தில் சரியாக கால்சீட் கொடுக்க வேண்டும். பிராக்டீஸ் செய்வதற்கு சரியாக வர வேண்டும். அதற்கு சம்மதம் என்றால் நிர்வாகத்திடம் பேசுகிறேன் என்று சொன்ன தோனி, இன்னொரு விஷயத்தையும் சொன்னார். கிரிக்கெட் மைதானத்தில் பவுலர்கள் ஸ்டெம்பை நோக்கி பந்தை போட மாட்டார்கள். பேட்ஸ்மேனை நோக்கி தான் வீசுவார்கள். அதை யோகிபாபுவால் சமாளிக்க முடியுமா? என்று அவரே முடிவு செய்து கொள்ளட்டும் என்றும் சிரித்துக் கொண்டே சொன்னார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.