மணிப்பூர் மாநில கலவரத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டதை மத்திய மாநில அரசுகள் கண்டிக்காததை காரணமாக கூறி மிசோரம் மாநில பாஜக துணை தலைவர் ஆர் வன்ரம்ச்சுவாங்கா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் சமீபத்தில் வெடித்த இனக்கலவரத்தின் போது, 357 (முந்நூற்று ஐம்பத்தேழு) கிறிஸ்தவ தேவாலயங்கள், பாதிரியார்களின் குடியிருப்புகள் மற்றும் தேவாலயங்களுக்குச் சொந்தமான அலுவலக கட்டிடங்கள் மெய்டீய் போராளிகளால் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது. தேவாலயங்கள் எரிக்கப்பட்டதை மணிப்பூர் மாநில முதல்வர் கண்டிக்கவில்லை அதேபோல் மத்திய உள்துறை […]