Raveena Ravi: டயலாக் இல்லாத 'மாமன்னன்' படத்தில் நடிக்க காரணம் இதுதான்: ரவீனா ரவி.!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி டப்பிங் ஆர்டிஸ்டாக பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேசியவர் ரவீனா ரவி. குரலாலே ரசிகர்களை கவர்ந்த ரவீனா தற்போது படங்களில் நடித்து வருகிறார். நல்ல கதாபாத்திரங்கள் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ரவீனா ரவி, அண்மையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாமன்னன்’ படத்தில் நடித்தார்.

பிரபலமான டப்பிங் ஆர்டிஸ்டான ரவீனா ரவி ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதனையடுத்து ‘லவ் டுடே’ படத்தில் நடித்தார். பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து வெளியான இந்தப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. இந்தப்படத்தில் யோகி பாபு ஜோடியாக பிரதீப் அக்காவாக நடித்திருந்தார் ரவீனா ரவி.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

‘லவ் டுடே’ படத்தில் ரவீனா ரவியின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றது. இதனையடுத்து தான் ‘மாமன்னன்’ படத்தில் பஹத் பாசிலின் மனைவியாக நடித்திருந்தார் ரவீனா ரவி. கடந்த மாதம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி நடிப்பில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது இந்தப்படம்.

‘மாமன்னன்’ படத்தில் வில்லனும் அரசியல்வாதியுமான பஹத் பாசில் ஜோடியாக நடித்த ரவீனா ரவிக்கு படத்தில் வசனமே இல்லை. இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல முன்னணி நாயகிகளுக்கு டப்பிங் பேசியே ரவீனாவுக்கே வசனம் இல்லையா? என ரசிகர்கள் கிண்டலடித்தனர். ‘மாமன்னன்’ சக்சஸ் மீட்டிங்கில் உதயநிதி இதனை சொல்லி ரவீனாவை கிண்டலடித்தார்.

நகைச்சுவை பட்டாளத்துடன் களமிறங்கும் ‘கவுண்டர் கிங்’: டைட்டிலே பயங்கரமா இருக்கே.!

இந்நிலையில் ரவீனா ரவி நேர்காணல் ஒன்றில் ‘மாமன்னன்’ படத்தில் வசனமே இல்லாமல் நடித்தது குறித்து பேசியுள்ளார். அதில், மாரி செல்வராஜ் இந்தப்படத்தில் நடிக்க போன் பண்ணிய போதே எனக்கு டையலாக் இல்லை என சொல்லிவிட்டார். எனக்கும் இது புதிதாக இருந்தது. அதுவும் பஹத் பாசில் ஜோடி என சொல்லிய போது சந்தோஷத்தில் துள்ளி குதித்தேன். அம்மாவுக்கும் ஒரே சந்தோசம். ஏனென்றால் பஹத் சார் அப்பா பாசிலுடன் அம்மா வொர்க் பண்ணி இருக்காங்க.

இந்தப்படத்திற்காக 17 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தேன். நிறைய காட்சிகள் எடுத்திருந்தோம். ஆனால் அதை படத்தில் வைக்கவில்லை. படம் பார்க்கும் போது வருத்தமாக இருந்தது. ஆனாலும் எனது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக ரீச் ஆகிவிட்டதால், அந்த வருத்தமெல்லாம் போய் சந்தோஷமாக மாறிவிட்டது. பஹத் சாரை பக்கத்தில் வைத்து கொண்டு கண்ணாலே சில காட்சிகளில் நடித்ததிற்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்தது. இவ்வாறு அந்த நேர்காணலில் பேசியுள்ளார் ரவீனா ரவி.

Jailer: ‘ஜெயிலர்’ புதிய போஸ்டர் மூலம் கன்பார்மான விஷயம்: படம் இப்படித்தான் இருக்க போகுது.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.