டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: தலைநகரில் பதற்றம்!

டெல்லியில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு அருகே இன்று பகல் 12 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

திடீர் தீ விபத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக நோயாளிகள் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். தீ விபத்து குறித்த தகவல் வந்ததும் எட்டு தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக அந்த இடத்திற்கு வந்தன.

எய்ம்ஸ் மருத்துவமனையின் பழைய ஓபிடி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள எண்டோஸ்கோபி அறையில் தீ விபத்து ஏற்பட்டது, அவசர சிகிச்சை பிரிவுக்கு சற்று மேலே இந்த தீ விபத்து நிகழ்ந்ததால் அறையில் இருந்த நோயாளிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது என்று எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.