இன்று முதல் 2வது முனையத்தில் இருந்து சர்வதேச விமானங்கள் இயக்கம் துவக்கம்| International flights start from Terminal 2 from today

பெங்களூரு:’இன்று காலை முதல் பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் இருந்து வெளிநாட்டு விமானங்களின் இயக்க துவங்கும்’ என விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் மூலம், தினமும் 30 விமானங்கள் வந்து செல்ல உள்ளது.

பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை, கடந்தாண்டு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

முழுமையான பணிகள் முடியாவிட்டாலும், உள்ளூர் விமான போக்குவரத்து ஜனவரியில் துவங்கியது.

இந்நிலையில், பெங்களூரு விமான நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் இருந்து நாளை (இன்று) காலை 10:45 மணி முதல் வெளிநாட்டு விமானங்கள் போக்குவரத்து துவங்குகிறது.

முதலில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வெளிநாட்டு நிறுவன விமானமும், இந்தியாவின் இண்டிகோ விமானமும் துவங்க உள்ளது. சிங்கப்பூரில் இருந்து பெங்களூரு வரும் எஸ்.கியூ.,508 / எஸ்.கியூ.,509 சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான பயணியர், விமான நிலையத்தில் இரண்டாவது முனையத்தின் அனுபவத்தை அனுபவிப்பர்.

இலங்கையின் கொலும்புவுக்கு இண்டிகோவின் 6இ 1167 விமானம் புறப்படுகிறது.

ஆக., 31 முதல் காலை 10:45 மணி முதல் அனைத்து சர்வதேச விமானங்களும் வந்து செல்ல துவங்கும். இதன் மூலம், தினமும் 30 முதல் 35 சர்வதேச விமானங்கள் இயங்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.