யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் படம்: தென்காசியில் தொடங்கியது

“நான் எப்போதுமே காமெடியன்தான்” என்று யோகி பாபு திரும்ப திரும்ப சொன்னாலும் அவர் கதையின் நாயகனாக நடிக்கும் படங்களும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. கடைசியாக 'லக்கி மேன்' படம் வெளிவந்தது. தற்போது 'பூமர் அங்கிள்' படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அடுத்து கதையின் நாயகனாக நடிக்கும் படத்தின் பணி தென்காசியில் தொடங்கி உள்ளது.

இந்த படத்தை 23 பிரேம்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் சஞ்சய் ராகவன் மற்றும் ரூக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் மது அலெக்சாண்டர் இணைந்து தயாரிக்கிறார்கள். ஜெய் என்ற புதுமுகம் இயக்குகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இது காமெடி கலந்த கிராமத்து குடும்ப கதை என்று கூறப்படுகிறது. தென்காசி, குற்றாலம் பகுதியில் ஒரே கட்டமாக படத்தை முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.