சென்னை நீர் வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியைத் தாண்டியதால் 100 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. சென்னை அருகே காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டாரத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவுடையது. இதன் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடி மற்றும் முழுக் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி ஆகும். ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் நீர் மட்டம் தற்போது 22 அடியைத் தாண்டி உள்ளது. […]
