"வாழ முடியவில்லை; அம்மா, அப்பாவிடம் திரும்பி வா…"- மகள் குறித்து விஜய் ஆண்டனி மனைவி உருக்கம்!

இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகங்களைக் கொண்ட கலைஞர் விஜய் ஆண்டனி.

விஜய் ஆண்டனி

அவருடைய மூத்த மகள் மீரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையுமே அதிர்ச்சியடையச் செய்திருந்தது. விஜய் ஆண்டனி தன் மகளின் இறப்பு குறித்து சமீபத்தில் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ‘நீ இல்லாமல் என்னால் வாழ முடியவில்லை’ என விஜய் ஆண்டனியின் மனைவியும் தயாரிப்பாளருமான ஃபாத்திமா விஜய் ஆண்டனி உருக்கமாக பதிவு ஒன்றை x சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார்.  

அவர் வெளியிட்டிருந்த பதிவில் , “ எங்களுடன் நீ 16 வருடங்கள் மட்டுமே வாழ்வாய் என்று தெரிந்திருந்தால் உன்னை என் அருகில் மட்டும்தான் வைத்திருப்பேன். அந்த சூரியனையும் நிலவையும் கூட உனக்குக் காட்டியிருக்க மாட்டேன். நான் தினமும் உன் நினைவால் இறந்து கொண்டிருக்கிறேன்.

நீ இல்லாமல் என்னால் வாழ முடியவில்லை. அம்மா, அப்பாவிடம் திரும்பி வா. லாரா உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள். லவ் யூ தங்கம்!”  என உருக்கமாக பதிவிட்டு விஜய் ஆண்டனியையும் டேக் செய்திருக்கிறார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.