நான் புதிய பாதையில் பயணிக்க உள்ளேன் – ராகவா லாரன்ஸ்

நடன இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் முனி, காஞ்சனா ஆகிய படங்களில் நடித்தது மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தவர். சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த ருத்ரன் படம் தோல்வி அடைந்தது. சந்திரமுகி 2 சுமாரான வெற்றியை பெற்றது.

தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்துள்ளார். அவர் கூறியதாவது, ” பழைய கதைகள் இனி வேலைக்கு ஆகாது. கொரோனா காலத்திற்கு பிறகு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இன்றைய தலைமுறை இயக்குனர்கள் லோகேஷ், நெல்சன் ஆகியோர் கதைக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. திரைக்கதை மற்றும் சண்டை காட்சிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர் . நானும் இந்த புதிய பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளேன். இதற்கு பதில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.