டில்லி போர் சூழ்ந்த இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட 212 இந்தியர்கள் விமானம் மூலம் டில்லிக்கு வந்துள்ளனர்.’ இன்று 7 ஆம் நாளாக இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான போர் நடைபெற்று வருகிறது. இந்த போரால் பல இந்தியர்கள் இஸ்ரேலில் சிக்கிக்கொண்டதால் அவர்களை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தது. இஸ்ரேலில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கி அதன்படி, டில்லியில் இருந்து நேற்று இஸ்ரேலுக்கு முதல் மீட்பு விமானம் அனுப்பப்பட்டது. […]
