சென்னை: மணல் குவாரி முறைகேடு தொடர்பாக மணல் காண்டிராக்டரான திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. மணல் குவாரி முறைகேடு தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தியது. அப்போது, மணல் காண்டிராக்டர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் மணல் குவாரிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் பிரபல மணல் காண்டிராக்டரான திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. திண்டுக்கல் தொழில் அதிபர் […]