சென்னை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் படிக்கட்டு பயணத்தைத் தடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளது. இன்று சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் பயணிப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் * மாநகர பேருந்துகளில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களைப் பாதுகாப்பாக உட்புறம் வருமாறும், படிக்கட்டு பயணத்தை அறவே தவிர்க்குமாறும் ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் நடத்துநர், ஓட்டுநரால் அறிவுறுத்தப்படுகிறது. * மேற்பார்வையாளர்கள், வருவாய்ப்பிரிவு அலுவலர்கள் […]
