சென்னை தாழம்பூர் அருகே பொன்மார் பகுதியில் நேற்று மாலை 7.30 மணியளவில் ஒரு பெண் பாதி எரிந்த நிலையில் கிடந்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். மேலும், அந்தப் பெண்ணை உடனே மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை விசாரணையைத் தொடங்கியது. இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி பாதிக்கப்பட்டப் பெண் உயிரிழந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக மதுரையைச் சேர்ந்த வெற்றிமாறன் என்ற பாண்டி மகேஸ்வரி (26) என்பவரைக் கைது செய்திருக்கிறது காவல்துறை. இது குறித்து காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “உயிரிழந்தவர் பெயர் நந்தினி(26 ), மதுரையைச் சேர்ந்த இவர், தனியார் ஐ.டி நிறுவனத்தில் கடந்த 8 மாதங்களாக பணியாற்றி வந்திருக்கிறார். இவருக்கும், இவருடன் பள்ளியில் படித்த வெற்றிமாறன் என்பவரும் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இதற்கிடையில், வெற்றிமாறன், பாண்டி மகேஸ்வரி எனும் திருநங்கையாக மாறிவிட்டதால், அவருடன் பழக்குவதை நந்தினி தவிர்த்து வந்திருக்கிறார் எனத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த வெற்றிமாறன் என்ற பாண்டி மகேஸ்வரி நந்தினியைக் கொலை செய்ய திட்டமித்திருக்கிறார். 24-ம் தேதி நந்தினிக்குப் பிறந்தநாள் என்பதால், அவருக்கு சர்பிரைஸ் செய்வதாக அழைத்துச் சென்று, தாழம்பூர் அருகே பொன்மார் பகுதியில் இரண்டு கைகளையும் சங்கிலியால் கட்டி, கை, கால் நரம்புகளைத் துண்டித்திருக்கிறார். ரத்த வெள்ளத்தில் நந்தினி துடித்துக்கொண்டிருந்தபோது,

அவர்மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருக்கிறார். இது குறித்துக் குற்றம்சாட்டப்பட்ட வெற்றிமாறன் பாண்டி மகேஸ்வரி-யிடம் விசாரித்ததில்,’நந்தினி தன்னைப் புறக்கணித்து மற்றவருடன் பழக்கிவந்ததால் அவரைக் கொலை செய்தேன்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் விசாரணை நடந்து வருகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.