Central govt orders investigation into Veena Vijayans Exalogic firm | ” உப்பை தின்றா தண்ணி குடிக்கணும் ” – கேரள முதல்வர் மகள் மீது புகார்; மத்திய அரசு விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் மகள் வீணா விஜயன் மீது ஊழல் புகார் எழுந்தது குறித்து விசாரிக்க மத்திய அரசு 3 அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இது ஆளும் இடதுசாரி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணியின் ஆட்சி நடக்கிறது. மாநிலத்தை பொறுத்தவரை காங்கிரசும், இடதுசாரியும் மாறி மாறி ஆட்சிக்கு வருவது வரலாறு. தற்போது பா.ஜ., வுக்கு செல்வாக்கு உயர்ந்து வருவதாக ஒரு விவரம் தெரிவிக்கிறது.

இந்நிலையில் கேரள முதல்வர் மகளுக்கு எதிரான புகார் மாநிலத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. வீணா விஜயன் எக்சாலஜிக் தொழில் நுட்ப நிறுவனம் நடத்தி வருகிறார். கொச்சி தாது மினரல் நிறுவனத்திற்கு சேவை செய்வதாக ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் படி 1. 72 கோடி பணம் பெற்றுள்ளார். எந்த சேவையும் நடக்கவில்லை. இது தொடர்பாக வருமான வரி துறையினர் கவனத்திற்கு வந்தது.

இதனையடுத்து இந்த மோசடி குறித்து கேரள கோர்ட்டில் சமூக நல ஆர்வலர் கிரீஷ்பாபு என்பவர் வழக்கு தொடர்ந்தார். ஆனால் வழக்கு தொடர்ந்த சில நாட்களில் மர்மமாக இறந்தார்.

இந்நிலையில் வீணா மீதான புகாரை விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்த குழு 4 மாதத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.