விசாகப்பட்டினம் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பயணித்த ஹெலிகாப்டர் வழி தவறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆந்திர பிரதேசத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கி பொதுக்கூட்டங்களை முழு வீச்சில் நடத்தி வருகின்றன. ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு பல பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். சந்திரபாபு நாயுடு விசாகப்பட்டினத்தில் இருந்து அரக்கு […]
