இறுதி கட்டத்தில் 'கருடன்'

வெற்றி மாறன் எழுதிய 'கருடன்' கதையை இயக்குகிறார் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார். இதில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கிறார். சசிகுமார், உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ஷிவதா நாயர், மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஆர்தர் ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

ஆக்ஷன் திரில்லர் ஜார்னரில் தயாராகி இருக்கும் இந்த படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கே.குமார் தயாரித்திருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.