நீலகிரி மாவட்டம் உதகையில் 7 டிகிரி குளிர் பதிவு

சென்னை: நீலகிரி மாவட்டம் உதகையில் 7 டிகிரி குளிர் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்குசுழற்சி நிலவுகிறது. இருப்பினும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 28-ம்தேதி வரை மழை பெய்ய வாய்ப்பில்லை. வறண்ட வானிலை நிலவக்கூடும்.

இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.