சென்னை: எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக “நடவடிக்கை எடுக்கப்படும்” என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாள் அமர்வில் கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி விடுத்த எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் […]