காணாமற்போனோரின் குடும்பங்களுக்கான உதவி கொடுப்பனவு வழங்குவதற்கான விண்ணப்ப படிவங்களை பூரணப்படுத்தும் செயற்திட்டம் முன்னெடுப்பு.

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் விசாரணைகளின் பின்னர் பரிந்துரைக்கப்பட்ட காணாமற்போன நபர்களின் குடும்பங்களுக்கான உதவி கொடுப்பனவு வழங்குவதற்கான விண்ணப்ப படிவங்கள் பூரணப்படுத்தும் செயற்திட்டம் 20.06.2024 இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

பகுதி பகுதியாக இடம்பெறும் இவ் செயற்பாட்டில் இன்றையதினம் 117 குடும்பங்களுக்கான விண்ணப்பபடிவங்கள் பூரணப்படுத்தப்பட்டன.

அந்தவகையில் இதுவரை 460 குடும்பங்களுக்கான விண்ணப்பபடிவங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் இன்று 117 குடும்பங்களுக்கான விண்ணப்பபடிவங்கள் பூரணப்படுத்தும் வேலைத்திட்டம் மாவட்ட செயலகத்தால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.