29 வயதில் ஓய்வை அறிவித்த பிரபல வீரர்! அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்!

Nicholas Pooran: டி20 போட்டிகளில் சிறந்த ஒரு வீரராக இருந்து வரும் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த நிக்கோலஸ் பூரன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது 29 வயதில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஹென்றிக் கிளாஸன் தன்னுடைய 33 வயதில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த சில தினங்களில் நிக்கோலஸ் பூரன் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். 

நிக்கோலஸ் பூரன் ஓய்வு

தனது இன்ஸ்டா பக்கத்தில் ஓய்வு குறித்து பகிர்ந்துள்ள நிக்கோலஸ் பூரன், “நிறைய யோசித்து யோசித்து பிறகு, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்க முடிவு செய்துள்ளேன். நாங்கள் விரும்பும் இந்த விளையாட்டு நிறைய கொடுத்துள்ளது, தொடர்ந்து கொடுக்கும் – மகிழ்ச்சி, சோகம், மறக்க முடியாத நினைவுகள் மற்றும் மேற்கிந்திய தீவுகள் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த மெரூன் நிறத்தை அணிந்துகொள்வது, தேசிய கீதத்திற்காக நிற்பது, நான் ஒவ்வொரு முறையும் மைதானத்தில் கால் வைக்கும்போது எனக்கு இருந்த அனைத்தையும் கொடுப்பது. அது எனக்கு உண்மையிலேயே என்ன அர்த்தம் என்பதை வார்த்தைகளில் சொல்வது கடினம். அணியை கேப்டனாக வழிநடத்தியது நான் எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக வைத்திருப்பேன்.

ரசிகர்களுக்கு – உங்கள் அசைக்க முடியாத அன்புக்கு நன்றி. கடினமான தருணங்களில் என்னை உயர்த்தினீர்கள், நல்லவர்களை ஒப்பிடமுடியாத ஆர்வத்துடன் கொண்டாடினீர்கள். என் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அணி வீரர்களுக்கு இந்த பயணத்தை என்னுடன் நடத்தியதற்கு நன்றி. உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் இதையெல்லாம் கடந்து சென்றது. எனது தொழில் வாழ்க்கையின் இந்த சர்வதேச அத்தியாயம் முடிந்தாலும், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் மீதான எனது காதல் ஒருபோதும் மங்காது. அணிக்கும் பிராந்தியத்திற்கும் வெற்றி மற்றும் எதிர்காலப் பாதைக்கு வலிமையைத் தவிர வேறொன்றையும் நான் வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

 
 

 

View this post on Instagram

 

 
 
 

 
 

 
 
 

 
 

A post shared by Nicholas Pooran (@nicholaspooran)

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தாலும் பிரான்சைஸ் லீகே கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளை தவிர்த்து மற்ற நாடுகளில் இருக்கும் பிரபலமான விளையாட்டு வீரர்கள் லீக் கிரிக்கெட் போட்டிகளுக்காக சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது அதிகரித்து வருகிறது. தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் மிகக் குறைவாகவே வழங்கப்பட்டு வருகிறது. 

ஆனால் அதே சமயம் அவர்கள் லீக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினால் அதிக சம்பளம் பெற முடியும். இதன் காரணமாகவே அவர்கள் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகின்றனர். அதே சமயம் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கிரிக்கெட் வீரர்களுக்கு போதிய ஊதியம் வழங்கப்படுகிறது. அதனால் அவர்கள் லீக் கிரிக்கெட்டை விட சர்வதேச போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். தற்போது லீகே கிரிக்கெட்டுகள் பிரபலமாக இருந்து வரும் நிலையில் ஒரு கட்டத்தில் மீண்டும் சர்வதேச போட்டிகள் அதிக பிரபலமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் டி20 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் நிக்கோலஸ் பூரன், கிளாஸன் போன்ற வீரர்கள் இல்லாதது ரசிகர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.