மும்பை,
சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள பைதான் எம்.ஐ.டி.சி.-யில் உள்ள ஒரு ரசாயன நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பலரும் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று நிறுவனத்தில் தீ ஏற்பட்டது. இதனையடுத்து தீயாணது மளமளவென பரவத்தொடங்கியது.
மாலை 5:50 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பல தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்ட பின்னர் இரவு 7:05 மணிக்குள் தீ அணைக்கப்பட்டது
இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை . தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.