என் மீது ஏதாவது கோபம் இருந்தால் தயவுசெய்து மன்னித்து கொள்ளுங்கள்: ராமதாஸிடம் மன்னிப்பு கேட்ட அன்புமணி

​திரு​வள்​ளூர் / மது​ராந்​தகம்: ‘என் மீது ஏதாவது கோபம் இருந்​தால் தயவு செய்து மன்​னித்​துக் கொள்​ளுங்​கள்’ என பாமக நிறுவனர் ராம​தாஸிடம் அக்​கட்​சித் தலை​வர் அன்​புமணி மன்​னிப்பு கேட்ட சம்​பவம் அரசி​யல் வட்​டாரத்​தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்​ளது. பாமக​வில் அதன் நிறு​வனர் ராம​தாஸுக்​கும், கட்​சித் தலை​வர் அன்​புமணிக்​கும் இடையே மோதல் போக்கு நிலவி வரு​கிறது.

இதற்​கிடையே, பாமக​வின் உறுப்​பினர் சேர்க்​கை, வாக்​குச் சாவடி குழுக்​கள் அமைப்பு உள்​ளிட்​டவை குறித்து விவா​திக்க முதல் மாவட்ட பொதுக்​குழு கூட்​டம் நேற்று திரு​வள்​ளூரில் நடை​பெற்​றது. இதில் அன்​புமணி, பொதுச்​செய​லா​ளர் வடிவேல் ராவணன், பொருளாளர் தில​க​பா​மா, சமூகநீதி பேரவை மாநில தலை​வர் பாலு, இளைஞர் சங்க செய​லா​ளர் பாலயோகி, அமைப்பு செய​லா​ளர் வெங்​கடேசன் உட்பட ஏராள​மானோர் பங்​கேற்​றனர்.

தொடர்ந்து அன்​புமணி பேசி​ய​தாவது: பாமக தொடங்கி 36 ஆண்​டு​கள் ஆகிறது. பாமக சமூகநீ​திக்​காக தொடங்​கப்​பட்ட கட்​சி. சமூகநீ​தி, சாதி​வாரி கணக்​கெடுப்பை திமுக அரசு நடத்​தும் என்ற நம்​பிக்கை இல்​லை. பொய் வாக்​குறு​தி​களை கொடுத்து மக்​களை ஏமாற்​றும் திமுக ஆட்​சி​யை அகற்றும் கவுன்ட்​ட​வுன் இன்​றி​லிருந்து தொடங்​கு​கிறது. 2026-ல் பாமக அங்​கம் வகிக்​கும் கூட்​டணி ஆட்சி அமை​யும்.

அடுத்​தவர்​கள் ஆட்​சிக்கு வர கட்​சியை நடத்​த​வில்​லை. உலக தந்​தையர் தின​மான இன்​று, ராம​தாஸ் உள்​ளிட்ட உலகத்​தில் உள்ள அனைத்து தந்​தைகளுக்​கும் வாழ்த்​துகள். ராம​தாஸ் நீண்ட ஆயுளோடு மனநிம்​ம​தி​யோடு, உடல் நலத்​தோடு, மகிழ்ச்​சி​யோடு வாழ​வேண்​டும். ராம​தாஸ் அவர்​களே உங்​களுக்கு என்​மீது ஏதாவது கோபம் இருந்​தால் தயவு செய்து என்னை மன்​னித்​துக் கொள்​ளுங்​கள். நான் என்ன செய்ய வேண்​டும் என சொல்​லுங்​கள்.

ஒரு மகனாக, கட்​சி​யின் தலை​வ​னாக அதை நிறைவேற்​று​வேன். வருத்​தப்​ப​டாதீர்​கள், கவலைப்​ப​டாதீர்​கள், கோபப்​ப​டாதீர்​கள். ஏனென்​றால், இது நீங்​கள் 45 ஆண்​டு​கள் வளர்த்த கட்​சி. உங்​கள் கனவு​களை நனவாக்​கு​வோம். நீங்​கள் இன்று தேசிய தலை​வர். கடந்த ஆண்டு பிரதமர் மோடி, உங்​களை இந்​தி​யா​வின் மூத்த தலை​வர் என்று சொன்​னார். அந்த மதிப்பு எங்​கள் அனை​வருக்​கும்​ உள்​ளது. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

திருஷ்டி: இதே​போல், மது​ராந்​தகத்​தில் நடந்த பொதுக்​குழு கூட்​டத்​தி​லும் அன்​புமணி பங்​கேற்​றார். அப்​போது அவர் பேசும்​போது, 45 நாட்​களில் மிகப்​பெரிய கூட்​டத்தை கூட்டி மாநாடு நடத்​தினோம். இதனால் ஆளுங்​கட்​சிக்கு வயிற்​றெரிச்​சல். இதனால், வந்த திருஷ்டி​யால் தான் இத்​தனை பிரச்​சினை​களும் நிகழ்ந்​தன. போதைப் பொருள் நடமாட்​டத்தை முதல்​வர் கண்​டு​கொள்​ள​வில்லை என குற்​றம்​சாட்​டி​னார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.