டெல்லி வரும் 27 அன்று காவிரி மேலாண்மை கூட்டம் டெல்லியில் கூடுகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆணையத்தின் சார்பில் அடுத்தடுத்து இதுவரை 40 கூட்டங்கள் நடத்தப்பட்டு தொடர்புடைய மாநிலங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 41-வது கூட்டம் டெல்லியில் உள்ள அலுவலகத்தில் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் வருகிற 27-ந்தேதி கூடுகிறது. […]
