சென்னை முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராக சிபிஐ நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. தமிழகத்தில் 2006-2011-ம் ஆண்டுகளில் நடந்த தி.மு.க., ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக க.பொன்முடி பதவி வகித்தபோது, விழுப்புரம் மாவட்டத்தில், அதிகளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்தநிலையில், இந்த […]
