லீட்ஸ்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த போட்டியில் இந்தியா தரப்பில் 5 சதங்கள் அடிக்கப்பட்டன. முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் சதமடித்து அசத்தினர். அதேபோல் 2-வது இன்னிங்சில் கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் சதமடித்தனர். இருப்பினும் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது.
இதன் மூலம் 148 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் 5 சதங்கள் அடித்தும் தோல்வியை தழுவிய முதல் அணி என்ற மோசமான சாதனையை இந்தியா படைத்துள்ளது.
இதற்கு முன்னர் 1928-29-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 4 சதங்கள் அடித்தும் தோல்வியை சந்தித்திருந்ததே மோசமான சாதனையாக இருந்தது. தற்போது இந்தியா அதனை முந்தி மோசமான சாதனை படைத்துள்ளது.