வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ஒருவர் மீது பாலியன் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த கிரிக்கெட் வீரர் கயானாவை சேர்ந்தவர் என்றும் தற்போதைய தேசிய அமைப்போடு தொடர்புடைவர் என கூறப்படுகிறது. 11 பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இதுவரை இந்த குற்றச்சாட்டுகள் குறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் வாய் திறக்கவில்லை.
இந்த 11 பேரில் ஒருவர் 18 வயதுக்குட்பட்டவர் என்றும், அவர்கள் அந்த வீரரால், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. வீரர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை முடி மறைக்க முயற்சிப்பதாகவும், குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தலைவர் கிஷோர் ஷாலோவிடம் கேட்டதாகவும் அவர், கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் சூழ்நிலைகள் குறித்து அறிந்திருக்கவில்லை. எனவே இந்த நேரத்தில் கருத்து தெரிவிக்கும் நிலையில் இல்லை என கூறியதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் ஒவரால் தொடர்பு கொள்ளப்பட்ட வழக்கறிஞர் நிகல் ஹியூஸ், ஜனவரி 2024ல் பிரிஸ்பேனின் கப்பாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் அந்த வீரர் இருந்ததாக குறிப்பிட்டார். கடுமையான குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், அந்த வீரர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படைவில்லை என கூறினார். ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய போது, வீரரின் நடத்தை குறித்த விவாதங்கள் தணிந்தன என ஹியூஸ் கூறினார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது பேசும்பொருளாக மாறி உள்ளது.
மேலும் படிங்க: 2024 டி20 உலக கோப்பையை வெல்ல இவர்தான் காரணம்.. மனம் திறந்த ரோகித் சர்மா!
மேலும் படிங்க: பும்ராவை மட்டும் நம்ப முடியாது… இந்திய அணியில் ‘சிஎஸ்கே’ பௌலர் – பக்கா பிளான் ரெடி!