சென்னை: மக்களை ஏமாற்றி சுரண்டுவதில் தி.மு.க. அரசு முதலிடம் என்று விமர்சித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணத்தை திமுக அரசு உயர்த்தப்போகிறது என்றும், மக்களை வாழவைக்கப் போவதாக கூறி, அவர்களை ஏமாற்றி தி.மு.க. ஆட்சிக்கு வந்ததாகவும் குற்றம் சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மராட்டியத்தில் நடப்பாண்டில் தொடங்கி அடுத்த 5 ஆண்டுகளில் மின்சாரக் கட்டணத்தை 26% குறைக்கப் போவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. அதேநேரத்தில் தமிழகத்தில் ஏற்கனவே 39.81% […]
