ஒவ்வொரு தொகுதியிலும் 2 லட்சம் வாக்குகள்; விஜய் தமிழக முதல்வராவார்: தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் நம்பிக்கை

தென்காசி: தமிழக வெற்​றிக் கழகத்​துக்கு ஒவ்வொரு தொகுதியிலும் 2 லட்​சம் வாக்​கு​கள் உள்​ள​தால், விஜய் தமிழக முதல்​வ​ராவது உறுதி என்று அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் ஆனந்த் கூறி​னார்.

தவெக தலை​வர் விஜய் பிறந்த நாளை முன்​னிட்​டு, தென்​காசி மாவட்​டம் சங்​கரன்​கோ​விலில் கட்சி பொதுக்​கூட்​டம் மற்​றும் நலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா நேற்று இரவு நடை​பெற்​றது. இதில் பொதுச் செய​லா​ளர் ஆனந்த் பேசி​ய​தாவது: தவெக முன்​னேறிக் கொண்​டிருக்​கிறது. சாதாரண மக்​கள், தொழிலா​ளர்​கள் நம்​மிடம் உள்​ளனர். நமக்கு விலாசம், மூச்சு எல்​லாமே விஜய்​தான். கட்சி நிகழ்ச்​சிகளுக்கு பேனர் வைக்​கக்​கூ​டாது என்று விஜய் கூறி​யுள்​ளார். அவர் சொல்​படி அனை​வரும் செயல்பட வேண்​டும்.

வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்க்க தந்தை பெயர், இருப்​பிடச் சான்று இருக்க வேண்​டுமென்​றும், இல்​லா​விட்​டால் பெயர் நீக்​கப்​படும் என்​றும் தேர்​தல் ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது. இதற்​காக மத்​திய அரசை கண்​டிக்​கிறோம். இந்த விஷ​யத்​தில் திமுக ஏன் மவுனம் காக்​கிறது என்று தெரிய​வில்​லை. ஒவ்​வொரு வீட்​டிலும் குறைந்​தது 2 அல்​லது 3 பேர் தமிழக வெற்​றிக் கழகத்​தில் உள்​ளனர். ஒரு தொகு​தி​யில் 80 ஆயிரம் வீடு​கள் இருந்​தால், தவெக​வுக்கு சராசரி​யாக 2 லட்​சம் பேர் வாக்​களிப்​பர்.

தமிழக மக்​களுக்கு அமை​தி​யான வாழ்க்​கையை தவெக​வால் மட்​டுமே கொடுக்க முடி​யும். 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தவெக வென்​று, தமிழக முதல்​வர் பதவி​யில் விஜய் அமர்​வார் என்​ப​தில் எந்த சந்​தேக​மும் இல்​லை. தவெக ஆட்சி அமைந்​ததும், சங்​கரன்​கோ​விலில் ஜவுளிப் பூங்கா அமைக்​கப்​படும். இவ்​வாறு ஆனந்த் பேசி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.