கர்நாடகாவில் 5 புலிகளுக்கு விஷம் வைத்து கொன்ற 3 பேர் கைது

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் மைசூருவை அடுத்​துள்ள மலே மாதேஸ்​வரா வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட கஜனூர் வனப்​ப‌கு​தி​யில் 2 தினங்​களுக்கு முன்பு ஒரு தாய் புலி​யும் அதன் 4 குட்​டிகளும் இறந்து கிடந்​தன.

அவற்​றின் பக்​கத்​தில் இறந்த பசு​வின் சிதைந்த உடலும் கிடந்​தது. இதுகுறித்து வனத்​துறை அதி​காரி​கள் விசா​ரித்த போது, அந்த பசு, கோப்பு கிராமத்தை சேர்ந்த கோனப்​பாவுக்கு சொந்​த​மானது என தெரிய வந்​தது.

புலிகள் மற்​றும் பசு​வின் உடலை பிரேத பரிசோதனை செய்த போது, புலிகளுக்கு விஷம் வைத்து கொல்​லப்​பட்​டது தெரிய வந்​தது. இதையடுத்து சரணால​யத்தை சுற்​றி​யுள்ள கிராமங்​களை சேர்ந்த 20-க்​கும் மேற்​பட்​டோரை பிடித்து அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தினர். அதில் கோப்பு கிராமத்தை சேர்ந்த மாது ராஜூ​வின் பசுவை புலி வேட்​டை​யாடி கொன்​ற​தால் இறந்த பசு உடலில் விஷத்தை கலந்து புலிகள் நடமாட்​டம் உள்ள பகு​தி​யில் வைத்​துள்​ளார். அந்த இறைச்​சியை உண்ட புலிகள் உயி​ரிழந்​தது தெரிய வந்​தது.

இதையடுத்து போலீ​ஸார் கோப்பு கிராமத்தை சேர்ந்த மாது​ராஜூ, அவரது நண்​பர்​கள் நாக​ராஜூ, கோனப்பா ஆகிய 3 பேரை​யும் கைது செய்​து சிறை​யில்​ அடைத்​தனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.